தொழில் அதிபர் மீது பாலியல் புகார் அளித்திருந்த பெண் கொலை.. சம்பந்தப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் சரண்.!

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்திருந்த பெண் தீவைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் குளித்தலை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மலர் என்ற அந்த பெண்மணி சில மாதங்களுக்கு முன் உரிமையாளர் நவநீதன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

ஞாயிற்றுகிழமை, கோயம்புத்தூரில் உள்ள நவநீதன் வீட்டிற்கு மலர் சென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலர் தனது மரண வாக்குமூலத்தில், நவநீதன் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிகிச்சை பலனின்றி மலர் உயிரிழந்த நிலையில், நவநீதன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.