பிங்கர்டிப் 2வது சீசன் : 17ம் தேதி வெளியாகிறது
ஓடிடி தளத்தில் வெளியான பிங்கர்டிரிப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி, கிட்டி, மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இது ஒரு கிரைம் ஒரு கிரைம் த்ரில்லர் தொடர். டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி, நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் கதை அமைப்பை கொண்டது. டிஜிட்டல் உலகில் முக்கியமாக இருக்கும் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது.
இது 6 கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. சிலர் வேட்டையாடுபவர்கள் மற்றும் சிலர் டிஜிட்டல் குற்றங்கள் அல்லது டிஜிட்டல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.
ஷிவாவகர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார், பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீனதயாளன் இசை அமைத்துள்ளார். பிலிம் க்ரூப் புரொடக்ஷன் சார்பில் அருண் குமார் மற்றும் ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர். வருகிற 17ம் தேதி வெளியாகிறது.