மாத்தளையில் ஆதரவற்ற குடும்பத்திற்கு தையல் இயந்திரம்

மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்னவின் பணிப்புரையின் பேரில், மாவட்ட செயலக ஊழியர்களின் உதவியுடன் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு ஜுக்கி தையல் இயந்திரம் அண்மையில் பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டது.

சமூக சேவை உத்தியோகத்தர் தர்மரத்ன ,ஆதரவற்ற குடும்பத்தை அடையாளம் கண்டதையடுத்து இந்த குடும்பத்திற்கான ஜுக்கி தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட மேலதிக செயலாளர் நிஷாந்த கருணாதிலக மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.