இன்று முதல் கொட்டப்போகுது கேரளாவில் தென்மேற்கு பருவமழை!| Dinamalar

மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று (ஜூன் 7) முதல் வலுவடைய வாய்ப்புள்ளதால் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘எல்லோ அலர்ட்டை’ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இப்பருவ மழை மே 27 துவங்கும் என ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மே 29 துவங்கியதாக உறுதி செய்யப்பட்டது. மழை வலுவடையாமல் மாநிலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் சிறிய அளவில் மழை பெய்தது.

இந்நிலையில் பருவ மழை இன்று முதல் வலுவடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘எல்லோ அலர்ட்’ விடுத்தது. நாளை எர்ணாகுளம், மலப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.