இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் காவலர் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

கேரளாவில், சாலை வளைவில் முன் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் காவலர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோழிக்கோட்டில் இருந்து மலப்புறம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, குற்றிப்புறம் என்னும் பகுதியில் சாலை வளைவில் வேகமாக திரும்பிய போது, ஓட்டுநரின் கவனக்குறைவால், முன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த குன்னங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பிஜு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.