ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட் கைது

பஞ்சாப்பில் முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை ஊழல் வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அம்ரீந்தர் சிங் ஆட்சியின் போது வனத்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சாது சிங் தரம்சோட் மற்றும் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றிய உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

தரம்சோட்டுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் வன அதிகாரி குர்னம்ப்ரீத் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஹம்மி ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைதுசெய்தனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.