ஓடிப் போன காதலர்களுக்கு செருப்பு மாலை தண்டனை| Dinamalar

சிந்த்வாரா: மத்திய பிரதேசம் அம்பாஜ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, 48 வயதான தாய் மாமனுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார்.

இதையடுத்து இருவரையும் வரவழைத்து ஊர் பஞ்சாயத்து நடந்தது. இதில் தகாத உறவுடன் பழங்குடிகளின் கலாசாரத்திற்கு மாறாக நடந்த சிறுமி மற்றும் தாய் மாமனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்துவது என, தீர்ப்பானது.

இதையடுத்து கிராம மக்கள், சிறுமிக்கும், தாய் மாமனுக்கும் கழுத்தில் செருப்பு, ஷூ மாலை போட்டு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தகவல் அறிந்த போலீசார், எட்டு பேரை கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையமும், சம்பவம் குறித்து போலீசாரிடம் அறிக்கை கோரியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.