சென்னை: போக்குவரத்து உதவி ஆய்வாளர் தற்கொலை – பணிச்சுமை காரணமா என விசாரணை

ஆவடி அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சுப்ரமணியன் (57). இவர், மணலி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியன், இன்று வழக்கம்போல் அலுவலகம் செல்ல தயாரானவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
image
இதையடுத்து நெடு நேரமாகியும் சுப்ரமணியன் வெளியே வராததால் அவரது மனைவி சந்திரகலா (50) மகன் விக்னேஷ் (30) ஆகியோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஃபேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை மீட்டு அம்பத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் உயிரிழந்த போக்குவரத்து காவலரின் பிரேதத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
image
தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வாளர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அம்பத்தூரில் இருந்து மணலி போக்குவரத்து பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். எனவே பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.