ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

மதுரையில் இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 2ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஷ்ணு(வயது 27). இவர் மாடக்குளம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபருக்கு 27 வயதே என்பதால், இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.