இஸ்லாமாபாத் : ‘முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஏதாவது நேர்ந்தால், தற்கொலைப் படையாக மாறுவேன்’ என, பாகிஸ்தான் அரசுக்கு, அவருடைய கட்சி எம்.பி., ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியடைந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தனக்கு எதிராக வெளிநாட்டு சதி நடப்பதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.இம்ரான் கானை கொல்வதற்கு சதி நடந்ததாகவும் அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கறிஞரும், இம்ரான் கான் கட்சி எம்.பி.,யுமான அதாவுல்லா, சமூக வலை தளத்தில், ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர்கூறியுள்ளதாவது:
இம்ரான் கான் தலையில் இருந்து ஒரு முடி உதிர்ந்தால் கூட, இந்த அரசை விட மாட்டேன்.ஆட்சியாளர்கள் அவர்களுடைய குடும்பத்தாரை, தற்கொலைப் படையாக மாறி தாக்குதல் நடத்தி கொல்வேன். என்னைப் போல ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தற்கொலைப் படையாக மாற தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
Advertisement