தேனி : கணவரின் கண்முன்னே பறிபோன மனைவி உயிர்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

தேனி மாவட்டம் போடி மேலசொக்கணதபுரத்தை சேர்ந்தவர்  ஜெயராமன். இவருக்கு ராமதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி தனது 4 வயது பேத்தியுடன் மேலசொக்கநாதபுரத்திலிருந்து போடிக்கு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இவர்கள் வாகனம் போடி அருகே வரும் போது , சின்னமனூரில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த ராமதேவி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கியது . இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

ஜெயராமன் மற்றும் 4 வயது பேத்தி ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ராமதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . கணவன் கண்முன்னே , பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.