தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; குழந்தைகள் உட்பட 50 பேர் பலி| Dinamalar

அபுஜா : தேவாலயத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓவோ நகரிலிருக்கும் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் வழிபாடு நடந்து கொண்டிருந்தது.அப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வழிபாட்டில் இருந்த கிறிஸ்தவர்கள் சிதறி ஓடினர். ஆலயத்துக்கு வெளியே ஓடி வந்தவர்களை அங்கு காத்திருந்த மற்றொரு கும்பல் துப்பாக்கியால் சுடத் துவங்கியது. தேவாலயத்துக்கு உள்ளேயும், வெளியேயும் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலர் சுருண்டு விழுந்தனர். சில நிமிடங்களில் இரண்டு கும்பலும் தப்பிச் சென்றன. இந்த வன்முறை வெறியாட்டத்தில் குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.