பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறை – அமைச்சர் சிவசங்கர்

சென்னை:
ந்தாண்டுக்குள் இ டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பேருந்துகளிலும் அதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பேருந்துகளில் பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

Gpay மூலம் டிக்கெட் பெறுவதற்காக பயணிகள் தங்கள் மொபைல் போனிலிருந்து மூலம் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்றும் நேரடி பணப் பரிமாற்றத்தை இதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதன்பிறகு படிப்படியாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.