பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது இடங்களில் ‘மாஸ்க்’ கட்டாயம்

பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் ஒரு நாள் பாதிப்பு 200-க்கும் மேற்பட்டோருக்கு உறுதியாகி உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளதாகவும், தினசரி பரிசோதனை எண்ணிகையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்த சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.