முன்னாள் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 போதை ஆசாமிகள் கைது.!

மதுரை மாவட்டம் சோழவந்தானில், மது அருந்த பணம் தர மறுத்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரான ஜோதி, ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் காவலாளியாக பணியாற்றி உள்ளார்.

இயற்கை உபாதை கழிக்க வைகை ஆற்றுப்பகுதிக்கு அவர் சென்ற போது போதை ஆசாமிகள் 4 பேர் மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.

தர மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.