முப்படை தலைமை தளபதி பணி நியமன விதியில் மாற்றம்| Dinamalar

புதுடில்லி :’முப்படை தலைமை தளபதி பதவிக்கு, 62 வயதுக்கு உட்பட்ட பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், துணை அட்மிரல்கள் விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், கடந்த ஆண்டு டிசம்பரில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அந்த பதவி இன்னும் காலியாகவே உள்ளது.


இந்த பதவிக்கு ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள, 62 வயதை கடக்காத முப்படைகளின் தளபதிகளில் ஒருவரை நியமிப்பது விதியாக இருந்தது. இந்நிலையில் இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ‘பொறுப்பேற்கையில், 62 வயதை கடக்காத ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், துணை அட்மிரல்களும் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.