’விரைவில் அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர்’.. இபிஎஸ்-க்கு ஆதரவான போஸ்டரால் பரபரப்பு

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து என சுவரொட்டி ஒட்டி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் புகார் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் வீட்டு அருகே சுரேஷ் என்ற நபர் ஒட்டிய சுவரொட்டியால் நேற்று அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
image
இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் சையதுகான் பெரியகுளம் நகர செயலாளர் ராதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் அதிமுக கட்சிக்கு கலங்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவர் சுவரொட்டி ஒட்டி அவதூறு பரப்பி வருவதாகவும், உரிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
image
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர் பேசும்போது… சுவரொட்டி ஒட்டிய நபர் அமுமுக கட்சியில் இருக்கிறார். அவர் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் தூண்டுதலின் பேரில் சுவரொட்டி ஒட்டியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நபர் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். அதனால் நாங்கள் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டோம் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.