100% ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – சோதனை அடிப்படையில் இங்கிலாந்தில் அமல்

லண்டன்,

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் ஊதிய இழப்பு இல்லாமல் ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இதில் பங்குகொள்கின்றன. தொழிலாளர்கள் தங்கள் உட்சபட்ச உற்பத்தி திறனை வெளிப்படுத்துவார்கள் என்ற புரிதலின் பெயரில் அவர்களுக்கு 100 சதவீத ஊதியத்தை கொடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.

இந்த திட்டமானது தொழிலாளர்களின் நலனிலும் உற்பத்தி திறனை அதிகரிப்பதிலும் எந்த அளவிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள். இந்த திட்டம் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்மை சேர்க்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.