40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி… பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து, புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது அவர்களுக்கு பதநீர், கருப்பட்டி உள்ளிட்ட உணவு பொருட்களும் 1980 மற்றம் 90 காலக்கட்டத்தில் அப்போதைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களான புளிப்பு மிட்டாய், தேன் மிட்டாய், பால் ஐஸ், புளிப்பு ஜாம் போன்றவையும் வழங்கப்பட்டன.

40 வருடங்களுக்கு பிறகு தங்களுடன் படித்த சக மாணவ, மாணவிகளை பார்த்த மகிழ்ச்சியில் அனைவரும் தாங்கள் படிக்கும் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பேசியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.