அரசு பேருந்தில் பெண் பயணி அவமதிக்கப்பட்ட விவகாரம்…. பேருந்து ஓட்டுநர், நடத்துனரை சஸ்பெண்ட்

கரூரில் ரேஷன் பொருட்கள் அடங்கிய மூட்டையுடன் வந்த பெண்ணை பேருந்தில் ஏற்றாமல் அவமதித்த விவகாரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2 நாட்களுக்கு முன் கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த பெண்கள் சிலர் 3 வயது பெண் குழந்தையுடன் ஆலமரத்துப்பட்டி நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். மூட்டையுடன் குழந்தையின் தாய் ஏறுவதற்கு முன்னரே ஓட்டுநர் பேருந்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பெண்கள், அரசு பேருந்தில் பெண்கள் அவமதிக்கப்படுவதாக கூறி பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வத்தையும் நடத்துனர் மகேந்திரனையும் சஸ்பெண்ட் செய்து கரூர் போக்குவரத்து மண்டல மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.