அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு! வெளிவந்துள்ள அறிவிப்பு (Video)



பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் 69500 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதில் 2022 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினை தொடர்ந்தும் வழங்குவதற்கு 87000 மில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக 40000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 ஜனவரி முதல் சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகக் கெடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 1000 ரூபாவினை தொடர்ந்து வழங்குவதற்கு 15000 மில்லியன் ரூபாவாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.