இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்குமேல் திருமண விழாக்களுக்கு தடை| Dinamalar

இஸ்லாமாபாத்:பாக். அரசு மின் சிக்கன நடவடிக்கையாக தலைநகர் இஸ்லாமாபாதில் இரவு 10:00 மணிக்கு மேல் திருமண விழாக்கள் நடத்துவதை தடை செய்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இலங்கையைப் போலவே அன்னியச் செலாவணி பற்றாக்குறை நிலவுகிறது. ”பெட்ரோல் டீசல் வாங்க பணமில்லை” என பாக். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறையால் இங்கு மின் உற்பத்தி குறைந்துள்ளது.இதையடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சிக்கன நடவடிக்கையாக அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் திருமண விழாக்கள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பிறப்பித்துள்ளதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். தடையை மீறி திருமண விழாக்கள் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.