குடிபோதையில் தகராறு.. அண்ணனை கொலை செய்த தம்பி..!

குடிபோதையில் அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர் மனைவியை பிரிந்து ஈரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது அருண்பாண்ண்டியன் மதுபோதையில் அவரது தம்பி வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையில் தொடர்ந்து தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவதன்று அண்ணனை சமாதானப்படுத்த அருண் குமார் சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அருண்பாண்டியன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமார் கறிவெட்டும் கத்தியால் அண்ணனை கொலை செய்ய துரத்தியுள்ளார். அவரை ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய அஜித்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.