குரங்கு அம்மை அரசு உஷார்| Dinamalar

பெங்களூரு : ”குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டவருக்கு சோதனை நடத்தப்படும்,” என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:உலகம் முழுக்க அச்சுறுத்தி வரும், ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை பரவலை கூர்ந்து கவனித்து வருகிறோம். இதன் அறிகுறிகள் கர்நாடகாவில் தென்பட்டால் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்கப்படும்.விமான நிலையத்தில் சோதனை போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

யாருக்காவது பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அவரை தனிமைப்படுத்தி சிசிச்சை அளிக்கப்படும்.பெங்களூரு, மங்களூரு விமான நிலையத்தில் சோதனை செய்யுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் இந்திரா காந்தி மருத்துவமனை, மங்களூரில் வென்லாக் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.