ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் மரணம்.!

மதுரையில், ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் ஜிம்மில் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், இளைஞர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.