தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களை 24 மணி நேரம் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் கடைகள், வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூன் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.