பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் பசில்! இறுதி தீர்மானம் நாளை


முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

அரச தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பசில் ராஜபக்ச  நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை தீர்மானம்

பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் பசில்! இறுதி தீர்மானம் நாளை

நாளை முற்பகல் 11 மணிக்கு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பது தொடர்பான அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பின்போது  பசில் ராஜபக்ச வெளியிட உள்ளார் என கூறப்படுகின்றது. 

பதவியைத் துறந்த பின்னர் பொதுஜன பெரமுன கட்சியின் வளர்ச்சிக்காக தனது முழு நேர  பங்களிப்பை ஆற்றவுள்ளதாக தெரியவருகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.