பிரதமரின் யோகா நிகழ்ச்சி; 15 ஆயிரம் பேர் பங்கேற்பு| Dinamalar

பெங்களூரு : மைசூரில் வரும் 21ல் நடக்கவுள்ள யோகா நிகழ்ச்சியில், பிரதமருடன் 15 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டின் அமுத பெருவிழாவை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், இம்முறை சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு வரும் 21ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.ஏற்பாடுகள் குறித்து மைசூரு மாவட்ட உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பசவராஜ் பொம்மை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அதிகபட்சமாக 15 ஆயிரம் பேர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யும்படியும், 13ம் தேதிக்குள் அவர்களை தேர்வு செய்யும்படியும் உத்தரவிட்டார்.பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியபடி, சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள 14 குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படும்படியும் முதல்வர் அறிவுறுத்தினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.