போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

முகத்துவார பதியில் 01 கிலோ 192 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன முகாமில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர். சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த 24 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.