முறையற்ற நிதி முகாமைத்துவம் நாட்டின் நெருக்கடிக்கான காரணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்ட கூற்று தொடர்பான பாராளுமன்ற விவாதம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெற்றது.

நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு காணப்படுவதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முறையற்ற நிதி முகாமைத்துவம் தற்போதைய நிதி நெருக்கடிக்கான காரணமாகும். இதனால், அரச செலவினத்தைக் குறைத்து, அரச வருமானத்தை மேம்படுத்துவது அவசியமாகும் என அவர் கூறினார். அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலிலிருந்து விலகிச் செயல்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்துப் பொருட்களின் விலைகளும் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
 
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது.பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு விலைகளை விதித்து கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் வர்த்தமானி ஜனாதிபதியினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 
ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக கைகளை உயர்த்திய அதே நபர்களே இன்று அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  
 
இந்த அரசாங்கத்தின் மோசமானபொருளாதார முடிவுகளே தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து கடன் அடிப்படையில், எரிபொருளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் நெருக்கடிகளை தீர்ப்பது அவசியம் என விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அதிக வட்டியுடன் கூடிய கடன்கள் பெற்றுக் கொள்ளப்பட்டமை தற்போதைய நெருக்கடிக்கான காரணமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கிர் மார்க்கார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.