ரயில் தடம் புரண்டு விபத்து : 10 பயணிகள் உயிரிழப்பு

கிழக்கு ஈரானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.

பாலைவன நகரமான தபாஸ் மற்றும் யாஸ்ட்  நகரத்தை இணைக்கும் தடத்தில் அதிகாலையில் ரயில் சென்றுக் கொண்டிருந்த போது, ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்களில் வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தரம் புரண்ட ரயில் பெட்டி பொக்லைன் இயந்திரத்தின் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.