ரூ.25,000 வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது| Dinamalar

நந்திமலை : நந்தி மலைக்கு செல்ல வழிப்பறி செய்து, அந்த பணத்தில் சொகுசாக இருந்த பெங்களூரை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில் உள்ள கோவிந்தபுராவை சேர்ந்த ஏழு பேர், ஏப்ரல் 29ல் சிக்கபல்லாபூரின் நந்தி மலைக்கு சென்றனர். சோதனைச்சாவடியில் டிக்கெட் வாங்க பணம் இல்லை என்பதால் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இவர்களில் மூன்று பேர், மேளகோட்டே கிராஸ் என்ற இடத்தில் விவசாயி ராஜண்ணா, 40, என்பவரிடம், முகவரி கேட்பது போல, 25 ஆயிரம் ரூபாய் பணம், மொபைல் போனை பறித்து கொண்டு நந்தி மலைக்கு சென்றனர். இரவில், மது குடித்து கும்மாளம் அடித்தனர்.சம்பவம் குறித்து விவசாயி கொடுத்த புகாரின்படி, தொட்டபல்லாப்பூர் ஊரக போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக நாகவாராவை சேர்ந்த சையத் சலீம், 25, சையத் அபிபுல்லா, 27, ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.