வேலூர் மத்திய சிறையில் சோதனை! செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரி பறிமுதல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் தொரப்பாடியில் ஆண்கள்மத்திய  சிறை உள்ளது. இங்க தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடையே, செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுக்க ஜெயிலில் அடிக்கடி சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

அதுபோல இன்றும், சிறை அலுவலர் தலைமையிலான காவலர்கள் ஜெயில் வளாகத்தில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.  அதில்,  7-வது பகுதி கழிவறையில் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்கள், சிம் கார்டுகள்  மற்றும் பேட்டரிகளை  போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.