1500 டிகிரி இரும்பு குழம்பில் விழுந்து உருகிய 3 குழந்தைகளின் தந்தை., சோகத்தில் குடும்பம்


அமெரிக்காவில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உருகிய இரும்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் Caterpillar’s Mapleton Foundry இரும்பு தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளி ஒருவர் கிட்டத்தட்ட 1500 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் உருகிய இரும்பு தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இல்லினாய்ஸை சேர்ந்த 39 வயதான ஸ்டீவன் டியர்க்ஸ் (Steven Dierkes) என்பவருக்கு ஜெசிக்கா ஷட்டர் என்ற மனைவியும், 12, 5 மற்றும் 4 வயதில் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.

1500 டிகிரி இரும்பு குழம்பில் விழுந்து உருகிய 3 குழந்தைகளின் தந்தை., சோகத்தில் குடும்பம்

ஸ்டீவனுக்கு வெறும் 5 நாட்கள் மட்டுமே அங்கு வேலை செய்ததாகவும், குறிப்பிட்ட இரும்பு உருக்கும் தொட்டி இருக்கும் தளத்தில் அவருக்கு அனுபவம் ஏதும் இல்லை என அங்கு வேலை பார்க்கும் ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளத்தில் நின்று தொட்டிக்குள் இருந்து மாதிரியை எடுக்க முயன்றபோது, அவர் கால் தடுமாறி உள்ளே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

உள்ளே அவர் முழுமையாக விழவில்லை என்றும், அவரது பாதி உடல் மட்டுமே இரும்பு குழம்பில் விழுந்து முழுவதுமாக உருகியதாகவும் அங்கு வேலைபார்க்கும் சக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1500 டிகிரி இரும்பு குழம்பில் விழுந்து உருகிய 3 குழந்தைகளின் தந்தை., சோகத்தில் குடும்பம்

ஆனால், இந்த சம்பவம் ஒரு விபத்தாகவே இருக்கலாம் என்றும் அங்கு இதில் குற்றப் பின்னணி ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவர் ஒரு கடின உழைப்பாளி என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதே தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒருவர் உயிரிழந்த நிலையில், இப்போது அடுத்த 6 மாதங்களுக்குள் இன்னொரு மரணம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஆலையில் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் கவலைகளும் எழுந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.