Rajini 169: ரஜினியுடன் இணைகிறாரா கே.எஸ்.ரவிக்குமார்? லேட்டஸ்ட் அப்டேட்!

‘ரஜினி 169′ ஃபீவர் ஸ்டார்ட் ஆகிடுச்சு. விஜய்யின் `பீஸ்ட்’ படத்தை அடுத்து ரஜினியை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள ‘ரஜினி-169’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இன்னொரு பக்கம், நட்சத்திரங்களின் தேர்வுகளும் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன்.

ரஜினி

சன் பிக்சர்ஸ் ரஜினி, நெல்சன் கூட்டணியுடன் களமிறங்குகிறது. விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்கு இடையேதான் ரஜினியிடம் கதை சொல்லி கமிட்டானார் நெல்சன். ‘ரஜினி 169’ உறுதியானதும் முதல் டெக்னீஷியனாக நெல்சனின் ஆஸ்தான நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத் இதிலும் இணைந்தார்.

ஜூலை இரண்டாவது வாரத்தில் ‘ரஜினி169’க்கான படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பிரமாண்ட ஸ்டார் காஸ்ட்கள் இருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி இருப்பதாகச் சொல்கிறார்கள். படத்தின் வில்லனாக சிவராஜ்குமார் நடிக்க உள்ளார். கன்னட ரசிகர்களால் ‘ஷிவாண்ணா’ என அன்போடு அழைக்கப்படும் சாண்டல் வுட் ஹீரோ அவர். பெங்களூரில் நடந்த படவிழா ஒன்றில் சிவராஜ்குமாரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது சிரிப்பை பதிலாகத் தந்தார். ரஜினி- சிவராஜ்குமார் போர்ஷன் செப்டம்பரில் படமாக்கப்படலாம் என்றும், மைசூர் அல்லது பெங்களூரில் அதன் படப்பிடிப்பு நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

ரஜினி, ஷிவாண்ணா

‘பீஸ்ட்’ படத்தில் நெல்சன் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற விமர்சனங்கள் பலமாகவே எழுந்தன. அதனால் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டில் கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதையை எதிர்பார்க்கலாம் என்ற பேச்சும் கோலிவுட்டில் எழுந்துள்ளது. ‘பீஸ்ட்’ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, மீண்டும் நெல்சனுடன் கைகோத்திருக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுவருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.