அஜித்தை பார்ப்பதற்காக வந்தேன்… நயன்தாரா திருமணத்தில் நிருபர்களிடம் பேசிய சிறுவன்

Vignesh Shivan Nayanthara Wedding Update In tamil : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இன்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கு ட்ரெஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், திருமணத்திற்கு வருபவர்கள் மொபைல்போன் கொண்டு வர வேண்டாம் என்றும், அப்படியே மீறி கொண்டுவந்தாலும் உள்ளே வந்தவுடன் சேம்பர் வைத்து மொபைல் சிக்னல் ஆஃப் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விக்கி – நயன் திருமணத்திற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார்.இந்த திருமணத்திற்கு ரஜினி,ஷாருக்கான உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

மேலும் திருமணத்திற்கு வந்திருந்த திரையுலக பிரபலங்களை பேட்டி எடுப்பதற்காக பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் ஹோட்டலின் முன்பு குவிந்திருந்தனர். இதில் திருமணத்தில் பங்கேற்ற பலரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து திருமணம் தொடர்பாக பேசினர்.

அந்தவகையில், டாக்டர் படத்தில் நடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லே, கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது தலைவர் வந்திருந்தார். மேடம் மற்றுமு இயக்குநருக்கு வாழ்த்துக்கள் என்று கூறிருந்தார்.

தொடர்ந்து இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றார் . இயக்குநர் மணி ரத்னம், கே.எஸ.ரவிக்குமார், மோகன்ராஜா தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சூர்யா கார்த்தி, இயக்குநர் ஏ.எல்.விஜய், கலா மாஸ்டர், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விக்கி – நயன் இருவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் நெருக்கமான நண்பரான விஜய்சேதுபதி குடும்பத்துடன் திருமணத்திற்கு வந்திருந்தார். இந்த திருமணத்திற்கு பிரபலங்கள் 200க்கு அதிகமானோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் பெரியம்மா தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும், திருமணம் முடிந்து அவர்கள் விருந்துக்கு வந்தால் அதுவே சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் ஹோட்டலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவனிடம் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, இங்கு கூட்டமான இருந்தது நயன்தாரா திருமணம் என்றும் அதற்கு அஜித் வருவார் என்றும் சொன்னார்கள். அஜித்தை பார்ப்பதற்காக நான் இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நயன்தாராவின் நெருங்கிய தோழியும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் நாயகிகளில் ஒருவருமான சமந்தா இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. படப்பிடிப்புகளில் அவர் பிஸியாக இருப்பதால் தற்போது திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.