இந்தியாவை மீண்டும் மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 7,240 பேர் பாதிப்பு!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 7,240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, டெல்லி போன்ற தலைநகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுப்பது, பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 7,240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று, 5,233 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதை விட 40 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சுமார் 94 நாட்களுக்கு பிறகு, நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,000-ஐ தாண்டி உள்ளது. இந்த பாதிப்பால், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 32,498 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை, 5,24,723 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.