இலங்கையில் பேருந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு


நாட்டில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ வழங்கியுள்ளார். 

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முறையற்ற விதத்தில் பேருந்து கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

இலங்கையில் பேருந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பேருந்து கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன.

முறைப்பாடுகளுக்கு உடன் தீர்வு

தொலைபேசியில் வரும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் பேருந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் நடமாடும் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.