எம்.பி., பதவி ராஜினாமா மாஜி நிதியமைச்சர் அதிரடி| Dinamalar

கொழும்பு:இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு அந்நாடு திணறுகிறது.இதற்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.

இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை பிரதமராக நியமித்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, தன் எம்.பி., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ‘எம்.பி., பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்’ என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.