ஒருதலை காதல்: மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்த கொன்ற இளைஞர்! – போலீஸ் விசாரணை

சேலம் கெங்கவல்லி, கூடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன். இவருடைய இரண்டாவது மகள் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர்களின் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அவரின் அக்கா பதறிப்போய் ஆத்தூர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையாளி சாமிதுரை

இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசும் காவல்துறையினர், “கொலைசெய்யப்பட்ட மாணவியின் அக்காவிடம் விசாரணை மேற்கொண்டதில் சில விவரங்கள் தெரியவந்தன. ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் சாமிதுரை என்பவர் அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறி அவரை தொந்தரவு செய்திருக்கிறார்.

க்ரைம் – கொலை

அதை மனைவி தன் வீட்டில் சொல்லியிருக்கிறார். அதனால், அவரின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சாமிதுரையைக் கண்டித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சாமிதுரை தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வீட்டில் மற்ற யாரும் இல்லாத நேரம் பார்த்து மனைவியைக் கொலைசெய்திருக்கிறார். கொலையாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்” என்கிறார்கள்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.