கனடாவில் மதிய உணவு நேரத்தில் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்


கனடாவில் தனது குழந்தையுடன் நடந்து சென்ற இளம்பெண்ணிற்கு பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Waterloo நகரில் உள்ள பியானீர் பூங்கா பகுதியில் இளம்பெண்ணொருவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது குழந்தையுடன் நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்பக்கமாக இருந்து அணுகிய நபர் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.

மதிய உணவு நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கறுப்பு முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் தாடி கொண்டவர் என பொலிசார் விவரிக்கின்றனர்.

கனடாவில் மதிய உணவு நேரத்தில் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

A Waterloo Regional Police cruiser. Kevin Nielsen / Global News

அவர் ஒரு கருப்பு பேஸ்பால் தொப்பி, சாம்பல் நிற ஸ்வெட்டர் மற்றும் கருப்பு பையை கையில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.  

அவர் தொடர்பிலோ அல்லது சம்பவம் குறித்தோ தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.