கர்நாடக மாநிலத்தில் துண்டாக வெட்டப்பட்ட இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேபி கிராமத்தில் உள்ள கால்வாயில் துண்டாக வெட்டப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் இடுப்புவரை உள்ள பாதி உடல் நேற்று மிதந்து வந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி மற்ற உடல் பாகத்தை போலீசார் தேடி வந்த நிலையில், அப்பகுதிக்கு அருகே உள்ள அரகெரே கிராமத்தின் குட்டையில் 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணின் பாதியளவு உடலை அங்கு மீன் பிடிக்க சென்றவர்கள் கண்டுபிடித்தனர்.

இரு பெண்களும் ஒரே மாதரி கொலை செய்யப்பட்டு கால்வாய் மற்றும் குட்டையில் வீசிப்பட்டுள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.