கிணற்றில் தவறி விழுந்த மகனை மீட்கச் சென்ற தந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி பலி

தேனி மாவட்டம் கைலாசபட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மகனை மீட்கச் சென்ற தந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கோவில் திருவிழாவிற்காக அங்கு சென்ற போது, அவரது மகன் மணிமாறன் கிணற்றில் தவறி விழுந்தான் அவனை காப்பாற்ற முயன்ற போது, பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் மகன் சபரிவாசன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ருத்ரன் என்ற 7 வயது சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.