கிருஷ்ணகிரி மாவட்டம்.! இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மெடுகம்பள்ளியை சேர்ந்த நாகோஜி மற்றும் அம்மாச்சி இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்பொழுது மெடுகம்பள்ளி பிரிவு சாலை அருகே, குருவிநாயனபள்ளியை சேர்ந்த சையத் காசிம், சபீர் உல்லா, நூர் முகமது ஆகிய மூன்று பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். 

இதில் இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் நாகோஜி, அம்மாச்சி, சையத் காசிம் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.