கொரோனா கருவி ஊழல் வியட்நாம் அமைச்சர் கைது| Dinamalar

ஹனோய்:கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், வியட்நாம் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுதும் விற்பனை செய்தது. இதன் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய சுகாதாரத்துறைக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயன் தான் லாங் மற்றும் முன்னாள் அறிவியல் துறை அமைச்சரும், ஹனோய் நகர மேயருமான சூ காக ஆன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை தவிர, அமைச்சக அதிகாரிகள், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த தலைவர்கள், ராணுவ ஜெனரல்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.