சித்து மூசாவாலா கொலையில் மூளையாக செயல்பட்டது லாரன்ஸ் பிஷ்னோய்.. கூட்டாளியையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..!

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலாவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ரவுடி கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய்தான் முக்கியக் குற்றவாளி என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

லாரன்சுடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மகாராஷ்ட்ர காவல்துறை அறிவித்துள்ளது. சித்தேஷ் காம்பளே என்பவரை 14 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அவர் கொலையில் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றும் மூசாவை சுட்ட 5 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நடிகர் சல்மான் கான் அவர் தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது குறித்தும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாரன்ஸ் பிஷ்னோயிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.