தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

nia officers investigated 8 places in tamilnadu சென்னை மற்றும் மயிலாடுதுறையில் , என். ஐ. ஏ அதிகாரிகள் 8 இடங்களில்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே நீடூரைச் சேர்ந்த சாதிக் பாஷா உட்பட 5 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலிசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு  பிரிவின்  விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு  அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடுர், கிளியனூர், உத்திரங்குடி,  உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.