திருமலையில் ஜூன் 12 – 14ல் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி : திருமலையில், வரும் ஜூன் 12ம் தேதி முதல், 14ம் தேதி வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். இதில் உற்சவ மூர்த்தியான மலையப்ப ஸ்வாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு அணிவித்துள்ள தங்க கவசம் களையப்பட்டு அவர்களுக்கு, மூன்று நாட்களுக்கு அபிஷேகம் செய்யப்படும். பின் சிலை மற்றும் கவசத்தில் உள்ள சேதங்களை கண்டறிந்து அவற்றை செப்பனிட்டு மீண்டும் புதிய பொலிவுடன் அணிவிக்கப்படும்.இதை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டு வருகிறது.
தங்க கவசம் களைந்த பின், உற்சவ மூர்த்திகளுக்கு முதல் நாள் வைர கவசம், இரண்டாம் நாள் முத்து கவசம் அணிவிக்கப்படும். மூன்றாவது நாள் மீண்டும் தங்க கவசம் அணிவித்து ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெறும். இதற்காக தேவஸ்தானம் சில ஆர்ஜித சேவைகளை அந்நாட்களில் ரத்து செய்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.