தூய்மைப்பணிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது – தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்!

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

வரும் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை ஒட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிவளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்ட விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியர்கள் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.