நயனை கரம்பிடித்த விக்கி.! கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழ்த்து மழை.!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த வந்த இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி பகுதியில் உள்ள ‘ஷெரட்டன் கிராண்ட் ‘ எனும் கடற்கரை நட்சத்திர விடுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

15-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி காலை 10.25 மணிக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக்கொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், விஜய்சேதுபதி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி ஆகியோர் வருகை புரிந்து, மணமக்களை வாழ்த்தினர்.

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், நட்சத்திர தம்பதிகள் மணிரத்னம்- சுஹாசினி, சரத்குமார்- ராதிகா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கெளதம் வாசுதேவ் மேனன், அட்லி, சிறுத்தை சிவா, ஹரி தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.